Monday, September 5, 2011

போதுமடா

புகைவண்டிப் பெட்டிகளை 
எரித்தது போதும் 
மனிதர்களை வெறிகொண்டு 
வெட்டியது போதும் 
மதப்பெயரால் பிரிவினை 
முளைத்தது போதும்
சாதி இரண்டென்று 
ஒளவையார் உரைத்த 
வார்த்தைகள் போதும்

இனி ...
சாதி ஒன்றுதான் 
மதம் ஒன்றுதான்
அது
'மனித சாதி' யா 
இல்லை ...
மனித சாதியிலும் 
சாதி சேர்த்தது போதும்
'மனிதம்' என்பதே 
போதுமடா

No comments: