இது என்ன விபரீதம்
உணவுக்குழல் வழி இறங்கி
இதயத்தில் தங்குகிறாய்!
______________________________
அசைவக்காரி
என்உயிரைத் தின்று தின்று
உடம்பு வளர்க்கிறாய்!
உயிர்முழுதும் தீர்ந்த பின்னால்
_____________________________
யாருக்கும் செலவிடாது
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
என் முத்தங்களை
எனக்கானவளுக்காக
______________________________
கவிதை என் உணவு
நீ சமைக்கக் கற்றுக்கொள்
______________________________
துண்டிக்க மாட்டாயென்று
நன்கு தெரிந்து கொண்டுதான்
சொல்கிறேன்
துண்டித்து விடென்று
தொலைபேசியில் பேசும்பொழுதெல்லாம்
______________________________
உயிர்த்தோழி
சோகங்களுக்கு எழுதலாம்
கவிதை
மரணத்திற்கு எப்படி?
ஒருநாள் கூட
நீ சொன்னதில்லை
நேற்றைய முன்தினம்வரை
விடை பெறும்போது
'போகிறேன்' என்று
______________________________
ஒன்று ஞாபகமிருக்கிறதா
"நாளை திருமணம் என்றால்கூட
இன்று உன்னுடன் வந்துவிடுவேன்
கவலைப்படாதே" என்றாய்
______________________________
உன் கண்ணீரில்
கண்டு கொண்டேன்
எனக்கான காதல்
அதனால்தான் என்னால்
அழ முடியவில்லை
______________________________
உணவுக்குழல் வழி இறங்கி
இதயத்தில் தங்குகிறாய்!
______________________________
அசைவக்காரி
என்உயிரைத் தின்று தின்று
உடம்பு வளர்க்கிறாய்!
உயிர்முழுதும் தீர்ந்த பின்னால்
என்உடம்பைத் தின்று
உயிர் வளர்ப்பாயோ!_____________________________
யாருக்கும் செலவிடாது
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
என் முத்தங்களை
எனக்கானவளுக்காக
______________________________
கவிதை என் உணவு
நீ சமைக்கக் கற்றுக்கொள்
______________________________
துண்டிக்க மாட்டாயென்று
நன்கு தெரிந்து கொண்டுதான்
சொல்கிறேன்
துண்டித்து விடென்று
தொலைபேசியில் பேசும்பொழுதெல்லாம்
______________________________
உயிர்த்தோழி
சோகங்களுக்கு எழுதலாம்
கவிதை
மரணத்திற்கு எப்படி?
ஒருநாள் கூட
நீ சொன்னதில்லை
நேற்றைய முன்தினம்வரை
விடை பெறும்போது
'போகிறேன்' என்று
______________________________
ஒன்று ஞாபகமிருக்கிறதா
"நாளை திருமணம் என்றால்கூட
இன்று உன்னுடன் வந்துவிடுவேன்
கவலைப்படாதே" என்றாய்
______________________________
உன் கண்ணீரில்
கண்டு கொண்டேன்
எனக்கான காதல்
அதனால்தான் என்னால்
அழ முடியவில்லை
______________________________