Sunday, September 19, 2010

கவிதைகள்

"அ" போடும் போதெல்லாம்
ஆசையாயிருக்கிறது
ஒன்றாம் வகுப்பு டீச்சரைப்(Teacher)
பார்க்க வேண்டுமென
       **************
காளான்கள்
காத்துக் கொண்டிருக்கின்றன
மழை பொழியட்டும் என்று
       **************


பசியோடிருக்கிறேன்
என்னைத் தின்று
தன் குடலில் செரிக்கிறது
கவிதை
       **************


பக்கங்களை நிரப்பும்
அவசியத்தில்
வசியப்பட மறுக்கிறது
கவிதை
       **************


மௌனங்களில்
கிறுக்கி வைத்துப்போகிறது
சப்தம்
       **************

No comments: