Sunday, September 12, 2010

செப்டம்பர் 11

பாரதி நீ இறந்துவிட்டாய்
ஆயினும் இரவல் கொடுத்தாய் 
உனது அடிமையாயிருந்த 
கவிதைக் கலையை 
மரபு உன்முன் மண்டியிட்டுநிற்க 
நீ மாற்றுவழியில்
வேறொரு நாடடைந்தாய்
புதுக்கவிதைக்குத்
தலைமகனென்னும் பேரடைந்தாய்
இருந்தாலும் உனக்கு
இவ்வளவு உரமாகாது
உரமில்லா பாரதிக்கு
எழுதுகோல் சாரதியாகாது
உன்னை முழுவதுமாய்ப்
படிக்கவில்லை எவரும்
மூன்றுபா கூட மனனம்
செய்யவில்லை நானும்
காலன் உன்னைக் கைதியாக்க
கரியாகி வந்தான்
"மதமே"றி உன்னைக்
கொண்டு போனான்
சரிவிடு
உன்னை இளைஞனாக்கிப்போனான்
உன்னைத் தனக்குள்கொண்டு
கொஞ்சம் இறையாகிப்போனான்

1 comment:

Sowmya said...

பாரதி கண்ட புதுமை பெண்...!